திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் முன்னிலையில் உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சிமலைக்குப்பத்தை சேர்ந்த மதன்குமாரும், ஆனந்தியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பாச்சல் பகுதி போலீசார், காதலர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர்.
காதலர் மதன்குமாருடன் காவல்நிலையத்திற்கு வந்த ஆனந்தியை உறவினர்கள், காரில் கடத்த முன்றனர்.
இதனை பார்த்த காவலர்கள், உடனடியாக தடுத்து நிறுத்தி பெண்ணை மீட்டனர். அப்போது தன்னுடன் வந்துவிடுமாறு அப்பெண்ணிடம் பெற்றோர் கதறி அழுதனர்.
இறுதியில் பெற்றோருடன் செல்வதாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து எழுதி வாங்கிய போலீசார், இருவரையும் அவரவர் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.
















