தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களின் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களில், தமிழ் மொழி இடம்பெறாமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் தமிழில் ஒரு எழுத்து கூட இல்லாமல், முழுமையாக ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் உள்ள நிலையில், மாநகராட்சியே இதனை மீறியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















