உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கியமான இடத்தை பிடித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் புகழாரம் தெரிவித்துள்ளது.
கோவாவில் நடந்த இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்துறை அமைச்சர் சுல்தான் அல் ஜபேர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தற்போதைய எரிசக்தி வர்த்தகத்தில் மூன்று சக்திவாய்ந்த மெகா டிரெண்டுகள் ஆசியா மற்றும் இந்திய சந்தையை தீர்மானிக்கப் போவதாக கூறியுள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான், முக்கியமான ஒப்பந்தத்தை இறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















