அமைதி வாரியத்தில் உறுப்பினரா? - பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Jan 31, 2026, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி வாரியத்தில் உறுப்பினரா? – பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Manikandan by Manikandan
Jan 31, 2026, 08:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரம்ப் தொடங்கிவைத்த அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் நிறுவன உறுப்பினரானதற்கு, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிரந்தரமாக நிறுத்தவும்,போரால் சிதைந்து போன காசாவை மறுகட்டமைக்கவும், சர்ச்சைக்குரிய பாலஸ்தீனப் பகுதியில் இடைக்கால அரசை ஏற்படுத்தவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு அமைதி வாரியத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தலைமையிலான ‘அமைதி வாரியத்தை முறைப்படித் தொடங்கி வைத்தார்.’

இந்த அமைதி வாரியத்தில் இணையுமாறு 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார்.

துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், அஜர்பைஜான்,ஹங்கேரி,பராகுவே பஹ்ரைன், மொராக்கோ, ஆப்கானிஸ்தான், அர்மீனியா, பல்கேரியா, இந்தோனேசியா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, கத்தார், உஸ்பெகிஸ்தான்,மங்கோலியா உள்ளிட்ட 59 நாடுகள் ட்ரம்பின் அமைதி வாரியத்தில் சேர ஒப்புதல் அளித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

கடந்த வாரம் டாவோஸில் நடைபெற்ற அமைதி வாரிய தொடக்கவிழாவில் வெறும் 19 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமைதி வாரியத்தில் சேர்வது குறித்த எந்த முடிவையும் இந்தியா அறிவிக்கவில்லை. டாவோஸில் நடந்த தொடக்கவிழாவிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், அமைதி வாரியத்தில் இணைந்ததற்காக,பாகிஸ்தானை ஒரு நிறுவன உறுப்பினராக வரவேற்று அமைதி வாரியத்தின் எக்ஸ் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதல் உட்பட உலகில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் ஊற்று பாகிஸ்தானில் இருக்கும் போது அமைதி வாரியத்தில் பாகிஸ்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சொல்லப்போனால் இணைய உலகமே இது தொடர்பான மீம்ஸ்களால் நிரம்பி வழிகிறது. ஏராளமான மீம்ஸ்களில், பின் லேடனைக் கொண்டு வந்து அவரை வாரியத்தின் தலைவராக்குங்கள் என்று மீம்ஸ் தான் நெட்டிசன்கள் பார்வையில் முதலிடத்தில் தனித்து நிற்கிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு நாடு எப்படி “அமைதி வாரியத்தில்” உறுப்பினராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அமைதியின் அடித்தளத்தையே அசைக்கும் நாடு என்று பதிலளித்துள்ளார் ஒருவர்.

உறுப்பினர் ஆவதற்கு 1 பில்லியன் டாலர் கட்டணம் என்ற நிலையில் பாகிஸ்தான் எப்படி உறுப்பினரானது என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கான 1 பில்லியன் டாலர் சேவைக் கட்டணத்தை யார் செலுத்துவார்கள்?” என்று ஒருவர் கேட்க மற்றொருவர்,1 பில்லியன் டாலர் நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டார்களா ?” என்று ஆச்சரியத்துடன் ஒருவர் கேட்டுள்ளார்.

இன்னொருவரோ சொந்த மக்களே ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கே போராடும் நிலையில் பாகிஸ்தான் எப்படி பணம் செலுத்தியது ? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

ட்ரம்பின் ‘அமைதி வாரியத்தில்’ உள்ள இரண்டாவது பெரிய பயங்கரவாத நாடு பாகிஸ்தான் என்றால் அமெரிக்கா தான் நம்பர் 1 பயங்கரவாத நாடு என்று ஒரு குறும்புக்காரர் கிண்டல் செய்துள்ளார்.

Tags: pak pmShehbaz Sharifpakistan Shehbaz SharifpakistanamericaGaza Peace CouncilPEACE
ShareTweetSendShare
Previous Post

மிரள வைக்கும் மோடி மேஜிக் – உலக நாடுகளால் ஒதுக்கப்படும் அமெரிக்கா!

Next Post

கணைய புற்றுநோய் பாதிப்பை முழுமையாக அழிக்க புதிய வழி – எலிகளில் பரிசோதனை நடத்தி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

Related News

கணைய புற்றுநோய் பாதிப்பை முழுமையாக அழிக்க புதிய வழி – எலிகளில் பரிசோதனை நடத்தி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

மிரள வைக்கும் மோடி மேஜிக் – உலக நாடுகளால் ஒதுக்கப்படும் அமெரிக்கா!

பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு: 12 இடங்களில் தாக்குதல் நடத்திய பலோச் விடுதலைப் படை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

பள்ளியில் சாதி பெயரை சொல்லி 8ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி வாரியத்தில் உறுப்பினரா? – பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

போர் பதற்றம் நடுவே இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

தனியார் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் – குமாரபாளையத்தில் பரபரப்பு!

ஓய்வூதியத் திட்டத்தில் திமுக அரசின் வாக்குறுதி பொய் – அன்புமணி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் கோலாகலம்!

ட்ரம்ப்பின் துருப்புச் சீட்டா? மெலனியா ஆவணப் படம் – வரவேற்பளிக்காத மக்கள்!

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு சவால் விடும் இந்தியாவின் 5-ம் தலைமுறை ஹெலிகாப்டர்கள்!

சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக உறவு ஆபத்தானது – வயிற்றெரிச்சலை கொட்டியுள்ள டிரம்ப்!

இது ஆப்கனை தாக்க சரியான நேரம் அல்ல – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்

EU ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசத்திற்கு நெருக்கடி! – திணறடித்த இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies