ஜனவரி மாதத்துடன் ஓய்வுபெற்ற சுமார் 5,000 அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசு ஆணை இன்னும் வெளியிடப்படாததால், தமிழக அரசு அவர்களை ஏமாற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் உண்மையில் பயனற்றதாகவும், அது ஒரு மோசடி என தான் ஏற்கனவே எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்ட பிறகே அது நடைமுறைக்கு வரும் என்ற உண்மையை திமுக அரசு திட்டமிட்டு மறைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்சம் 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில், தற்போதைய திமுக அரசிடம் அதற்கான நிதி வசதி இல்லை என்றும், அதனால் நிதி ஒதுக்கவும் முடியாது, திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
















