மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும்,
கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்திற்காக புதிதாக 3 அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















