மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிகபட்சமாக 7 லட்சம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பாதுகாப்பு துறைக்கு 7 லட்சத்து 84 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறைக்கு 5 லட்சத்து 98 ஆயிரத்து 520 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 2 லட்சத்து 73 ஆயிரத்து 108 கோடியும், உள்துறைக்கு 2 லட்சத்து 55 ஆயிரத்து 234 கோடியும், வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 671 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கல்வித் துறைக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எரிசக்தி துறைக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 29 கோடி ரூபாயும் ,சுகாதாரத்துறைக்கு ஒரு லட்சத்து நான்காயிரத்து 599 கோடி ரூபாயும்,நகர்ப்புற வளர்ச்சிக்கு 85 ஆயிரத்து 522 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு 74 ஆயிரத்து 560 கோடி ரூபாயும், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு 70 ஆயிரத்து 296 கோடி ரூபாயும், சமூக நலத்துறைக்கு 62 ஆயிரத்து 362 கோடி ரூபாயும்,
அறிவியல் துறைகளுக்கு 55 ஆயிரத்து 756 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, வரி நிர்வாகத்துறைக்கு 45 ஆயிரத்து 500 கோடியும்,
வெளியுறவுத் துறைக்கு 22 ஆயிரத்து 119 கோடி ரூபாயும், நிதித்துறைக்கு 20 ஆயிரத்து 649 கோடி ரூபாயும்,வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஆறாயிரத்து 812 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
















