ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடந்த தைப்பூசத் தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி லட்சுமண தீர்த்த குளத்தை வந்தடைந்தனர்.
இதனை அடுத்து, தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
















