வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என கூறியும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இடதுக்கீடு செயல்படுத்தப்படாததால் வன்னிய இளைஞர்கள் பலர் கல்வி கற்க முடியாமலும் வேலைவாய்ப்பினை பெற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரசு வேலை கிடைக்காமல் திருவண்ணாமலையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இறந்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்,
வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















