பீகாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. உயிரிழந்த காகங்கள்
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தச் சோதனையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
















