தேனியில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் பழக்கடை பாண்டி என்பவர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட போது அங்கு வந்த மர்ம நபர்கள், பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் சரிந்து விழுந்த பாண்டி, சம்பவ இடத்திலேயே உயிரை பறிகொடுத்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து பாண்டியின் உடலை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
















