வங்கதேசத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு வங்கதேசம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், வங்கதேசத்தின் மீது மத்திய அரசு பெரும் அதிருப்தியில் இருக்கிறது. எனவே, இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை கூறப்படுகிறது.
















