தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் ஆயிரத்து 315 கிலோ மோனசைட் என்ற அரிய வகை கனிமம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் பேசிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, நம் நாட்டில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் அரிய வகை கனிம வளங்களை அணுசக்தித்துறை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரை பகுதிகளில் உள்ள மண்ணில் ‘மோனசைட்’ என்ற அரிய வகை கனிமம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
8 மாநிலங்களில் உள்ள படிமங்களில் மட்டும் ஆயிரத்து 315 கோடி கிலோ மோனசைட் கனிம வளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,
723 கோடி கிலோ அளவு அரிய மண் ஆக்சைடு வளங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள கடினப் பாறைகளில் 129 கோடி கிலோ அளவில் மோனசைட், ஆக்சைடு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரிய கனிம வளங்கள் துறையில் உலகளவில் இந்தியா முதல் நான்கு
நாடுகளில் ஒன்றாக உள்ளது எனவும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
















