வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி வரம்பை ஐம்பதாயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பயண உடைமைகளுக்கான விதிகள் 2026 எனும் பெயரில், பழைய விதிகளுக்கு மாற்றாக புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், இந்தியா வரும் குடிமக்களோ அல்லது இந்திய வம்சாவளியினரோ, இனி 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி இல்லாமல் கொண்டு வர முடியும். இதேபோல், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கான வரம்பும் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் ஓராண்டுகளுக்கு மேல் தங்கியிருந்த பெண்கள் 40 கிராம் தங்கத்தையும், ஆண்கள் 20 கிராம் தங்கத்தையும் சுங்கவரியின்றி கொண்டு வர முடியும்.
இது அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற நகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















