சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை, காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்கக் சங்கிலி பரிசளித்து கௌரவித்தார்.
சென்னை தியாகராய நகரில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா என்பவருக்கு, தங்க நகைகள் கிடைத்தன. இதனை அவர், தனது மேலதிகாரி உதவியுடன் காவல்நிலையத்தில் ஒப்டைத்தார்.
அதில் 45 சவரன் நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்கச்சங்கிலியை பரிசாக அளித்தார்.
ரஜினியின் இந்த செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
















