மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெறும் எனவும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் ஆணையர்கள் இதில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் இணைந்து தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகள், தேர்தல் முன்னேற்பாடுகள், அண்மையில் தொடங்கப்பட்ட ECINET தளம் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் கலந்துரையாடல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















