கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குமார் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் விழாவில் ஆசிரியர் பணியைத் தாண்டி அரசியல்வாதி போல் பேசியுள்ளார். கல்வி கற்கும் இடமான பள்ளியில், மாணவர்கள் முன்னிலையில் அவர் திமுகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், காவி நிறத்தில் இருக்கும் பள்ளி கட்டடத்தின் நிறத்தை மாற்ற நிதியளிக்க வேண்டுமென அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆசிரியர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















