திருவண்ணாமலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் சென்ற வாகன ஓட்டி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடக்க முயன்ற நிலையில், அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பியதால் விபத்து ஏற்பட்டது.
இதில், வயதான தம்பதி மற்றும் இரண்டு கல்லூரி மாணவிகள் என 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
















