சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் விற்பனை மோசடி தொடர்பாக தேவஸ்தான அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதில் மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் நெய் விற்பனையில் 13 லட்சத்து 67 ஆயிரத்து 900 ரூபாய் மோசடி நடந்ததை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உட்பட மொத்தம் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேவஸ்தான அதிகாரியான சுனில்குமார் போற்றி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு அவரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















