மார்ஸ் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் துளையிடும் பணியை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு ஆய்வுகளை மேற்கோண்டுள்ளது.
அந்த காட்சிகளை செவ்வாய் கிரகத்தின் இருண்ட இரவில் ரோவரில் உள்ள வாட்சன் கேமரா, LED விளக்குகளை பயன்படுத்தி பாறைகளின் இடுக்குகள் மற்றும் துளையிடப்பட்ட பகுதிகள் மிக நெருக்கமாகப் படம்பிடித்துள்ளன.
ரோவர் சேகரிக்கும் இந்த பாறைத் துகள்கள், எதிர்காலத்தில் மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன் திட்டம் மூலம் பூமிக்குக் கொண்டு வரப்பட உள்ளன.
















