ராஜஸ்தானில் தனது காதலனுக்காக கணவன் மீது காரை ஏற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த புதுமணத் தம்பதியான ஆஷிஷ் மற்றும் அவரது மனைவி அஞ்சு மீது கார் ஒன்று ஏற்றிவிட்டு தப்பிச்சென்றது.
இதில் ஆஷிஷ் உயிரிழந்த நிலையில், அஞ்சு சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்தபோது, அவரது நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
முதலில் இது வெறும் ஹிட் அண்ட் ரன் கேஸ் என நினைத்த போலீசாருக்கு, விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன.
அஞ்சுவும், சஞ்சுவும் ஏற்கனவே காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் திட்டம் தீட்டி ஆஷிஷை கார் ஏற்றி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அஞ்சு, சஞ்சு உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
















