ரஷ்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ அருகே உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிரம்பியிருந்த பெட்டிகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 1,000 அடி உயரத்திற்கு நெருப்புக் கோளங்கள் எழும்பின. பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்திருந்தது.
இந்த விபத்தில் சுமார் 30 ரயில் பெட்டிகள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
8-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட நாசவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
















