பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து, தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களைக் குறிக்கும் வகையில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அயல்நாட்டு மண்ணில் இந்திய பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதைக் காண்பிக்கும் நோக்கமாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பரதம், ஒடிசி, கதக், கதகளி, மோகினியாட்டம், குச்சிப்புடி உள்ளிட்டவற்றின் கலவையும், தமிழ், லாவணி, பஞ்சாபி, ராஜஸ்தானி, ஒடியா, பிஹு நாட்டுப்புற மரபுகளின் தாளங்களும் இந்த நிகழ்சிசியில் இடம்பெறுகின்றன. இந்த நடன நிகழ்ச்சியை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைக்க முயற்சிப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
















