13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ராஜேஸ்வரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய கயல்விழி, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மயில்வாகனன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரம்யபாரதியை, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று, கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் சிங், காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்த்தப்பட்டு, சேலம் வடக்கு மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
















