இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியா, அமெரிக்கா இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும், நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் , நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’வை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால ஒப்பந்தம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், மேலும் இந்த கட்டமைப்பு நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும் எனறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டமைப்பு நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைய இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















