மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல முல்தானி பேக்கரியின் உரிமையாளர் 17 மாடி கட்டத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட முல்தானி பேக்கரி, மகாராஷ்டிராவில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. அதன் உரிமையாளரான சுனில் மோதிலால் சதரங்கானி, அம்மாநிலத்தின் முக்கிய தொழிலதிபராக இருந்து வந்தார். இந்நிலையில், புனேவில் உள்ள 17 மாடிகளை கொண்ட குடியிருப்பின் மேல்பகுதிக்கு சென்ற அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த பாதுகாப்பு காவலர் விரைந்து சென்று, சுனில் மோதிலாலை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதன் பலனாக மோதிலால் கீழேயும் இறங்கி வந்தார். அப்போது, தனது சாவியை கட்டத்தின் மேல்பகுதியிலேயே வைத்துவிட்டதாக தெரிவித்த அவர், அதனை எடுப்பதாக கூறி மீண்டும் 17வது மாடிக்கு சென்றார். அங்கு கட்டத்தின் முனையில் நின்றபடி கைகூப்பி பிரார்த்தனை செய்த அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
முல்தானி பேக்கரி உரிமையாளரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















