தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவில் புனிதநீர் தெளிக்க பயன்படுத்திய ட்ரோன் பக்தர்கள் தலையில் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.
நாலாட்டின்புதூரில் உள்ள ஸ்ரீகரியமால் அழகர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
யாகசாலை பூஜைக்கு பின்னர் கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிரோன், பக்தர்கள் கூட்டத்தில் விழுந்தது. இதில் தேனி மாவட்டம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணவன்-மனைவி காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
















