தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் அருகே வாணியாறு அணைப் பகுதியில் கடந்த 2ம் தேதி 80 வயது மூதாட்டி காளியம்மாள், புங்கை கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், மூதாட்டியை அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
பின்னர் மூதாட்டி இறந்துவிட்டதாக கருதி புதருக்குள் வீசிச் சென்றுள்ளனர். முனகல் சத்தம் கேட்டு மூதாட்டியை மீட்ட பொதுமக்கள், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மூதாட்டிக்கு உடலில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம், தமிழ்நாட்டில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தையும், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலையும் காட்டுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
















