தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மத்திய பட்ஜெட் தொடர்பாக விளக்கமளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி செல்லும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் இளைஞர்களுக்கான பட்ஜெட்டாகவும், நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என உறுதிபடக் கூறினார்.
















