விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி சென்ற திமுக நிர்வாகியின் காரை தடுத்து நிறுத்தி ‘தன்மீது ஏற்றிவிட்டு போ’ என டிஎஸ்பி ஆவேசத்துடன் கூறியதால் பரபரப்பு நிலவியது…
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிலையில், அவரது வருகைக்காக 4 வழிச்சாலையில் வந்த வாகனங்கள் கல்குறிச்சி நகருக்குள் திருப்பி விடப்பட்டன.
அப்போது திமுகவினர் வந்த கார் ஒன்று போலீசாரின் அறிவுறுத்தலை மீறி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது. இதனால் ஆத்திரமடைந்த டிஎஸ்பி, காரை தடுத்து நிறுத்தி ‘தன்மீது ஏற்றிவிட்டு போ’ என ஆவேசத்துடன் கூறினார்.
இதனிடையே திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பின் அலங்காரத்திற்காக கட்டப்பட்ட பழங்களை திமுக தொண்டர்கள் போட்டிப் போட்டு எடுத்து சென்றனர். கரும்பு கட்டுகள், வாழை தார்களை திமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முண்டியத்துக் கொண்டு அள்ளிச் சென்றனர்.
















