ராகுல்காந்தி மற்றும் எம்.பி ஜோதிமணியை கண்டித்து கரூரில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாடாளுமன்ற மாண்பை சிதைத்து அராஜக அரசியல் செய்து வருவதாக கூறி ராகுல்காந்தி மற்றும் ஜோதி மணியை கண்டித்து கரூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராகுலின் புகைப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
















