சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி நடைபெற்றது.
பாதுகாப்பான பயணம், பாதுகாப்பான சாலை என்ற தலைப்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே சைக்ளோத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சாலை விதிகளை மீறுவதை தடுப்பது, சைக்கிள் ஓட்டுவதால் ஆரோக்கியத்தை பேணுவது உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் விஜயகுமார் தொடங்கி இந்த சைக்ளோத்தான் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேப்பியர் பாலத்தில் தொடங்கிய சைக்ளோத்தான், திரு.வி.க.சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சென்று நிறைவடைந்தது.
















