பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் - நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
Aug 12, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட அரசு விருந்தில், தமிழகத்தின் பெருமைமிக்க அடையாளமான எம்ஜிஆர் அவர்களின் “நாளை நமதே” என்ற புரட்சிகரமான திரைப்படப் பாடல் பாடப்பட்டிருப்பது நமக்கான பெருமை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், சாதாரண ஏழைத் தாய்க்கு மகனாகப் பிறந்து, தமிழ்த் திரையுலகில் தமது பொது வாழ்க்கையைத் துவங்கி, பின்பு தமிழக அரசியலில் ஆகப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்ததோடு, தமது ஈகை குணத்தால் பொன்மனச் செம்மல் என இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு, கடல் கடந்த நாடுகளின் தலைவர்களும் ரசிகர்களாக இருப்பதைக் கண்டு ஒரு தமிழனாக நான் கர்வம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், துவளும் மனதைத் தாங்கிப் பிடிக்கும் உத்வேகப் பாடலாகத் தமிழக மக்களின் மனதினை ஆக்கிரமித்திருக்கும் “நாளை நமதே” என்ற பாடலை, நமது பாரதத்தின் வளர்ச்சியை வெற்றிப் பாதையில் தூக்கிச் சுமக்கும் தன்னலமற்ற தலைவர்  நரேந்திர மோடிக்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அர்ப்பணித்துள்ளது ஆகப் பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “காலங்கள் எனும் சோலைகள் மலர்ந்து, காய் கனியாகும் நமக்கென வளர்ந்து” என்ற அப்பாடலின் வரிகள்  பிரதமர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையான “வளர்ந்த பாரதம்” என்ற இலக்கையும், இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசியல் மாற்றங்களையும் அப்படியே அடிக்கோடிட்டுக் காட்டுவது போலவே இருப்பது தற்செயலான அதிசயம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற நாட்டு அதிபர்கள்பாரதப் பிரதமர் அவர்களை எதிர்காலத்தின் நம்பிக்கையாகப் பார்க்கிறார்கள் என்பதற்கான சான்றான இந்நிகழ்வைத் தொடர்ந்து எத்தனை முறை பார்த்தாலும் திகட்டவே திகட்டாது என்றும் நயினார் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags: pm modi malaysiapm modi malaysia livepm modi malaysia newspm modi malaysia trippm modi in malaysiapm modi malaysia visitpm modi malaysia speechnallai namathe songnainar welcome
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Next Post

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies