சென்னை கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமில் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்றனர்.
கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவசிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை, கோவை அரி பவுண்டேஷன், கலைகளின் ஆய்வு நிறுவனம் மற்றும் திருமூலர் வேத சக்தி அகாடமி ஆகியவை இணைந்து ‘வாத்ஸல்ய பாவம்’ என்ற பெயரில் நடத்தின.
இதில், சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான வேத சக்தி, வேதப்புள்ளி மற்றும் வர்ம மர்ம மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த முகாமின் சிறப்பம்சமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர்களது பெற்றோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
















