ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிா்காலத்தில் நடைபெற்ற தோ்தலில் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இதனை தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் 316 இடங்களில் எல்டிபி கட்சி வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது .
பெரும்பான்மைக்கு 261 இடங்களில் வெற்றிபெற வேண்டிய தேவை இருந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது.
இதனிடையே, ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்கு வகிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் சனே தகாய்ச்சியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா-ஜப்பான் நட்புறவு மேலும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















