தெற்கு சூடானில் தீவிரமடைந்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 3 ஆண்டுகளாக, ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவப் படைக்கும் அதிகார மோதலால் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இதன் காரணமாக உணவு உற்பத்தி மற்றும் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அன்டோனியோ குட்டரெஸ், சுமார் ஒரு கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற, மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
















