ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் காந்தியை புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்நார். அப்போது அவரை வரவேற்பதற்காக அமைச்சர் காந்தி காத்திருந்தார்.
ஆனால் அவரை புறக்கணித்து முதலமைச்சரை ஸ்டாலின் வேறு வழியில், வளாகத்திற்கு சென்று ஆலையை திறந்து வைத்துள்ளார்.
முன்னதாக சென்னையில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பங்கேற்காத நிலையில், தற்போது இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த தொழிற்சாலை நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என தெரிவித்தார்.
















