கோவையில் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் என்றும்,
அங்கன்வாடி ஊழியர்களுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும், போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமற்ற செயல் என வேலுமணி குறிப்பிட்டார்.
















