மலேசியாவில் "திருவள்ளுவர் மையம்" - பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று
Jul 20, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று

Manikandan by Manikandan
Feb 9, 2026, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, தமிழ் மொழியை அவர் எந்த அளவுக்கு ஆழமாக நேசிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமையை மீண்டுமொரு முறை உலகிற்கு பறைசாற்றியுள்ளார். தமிழ் மொழியின் தொன்மையான வரலாற்றினை அறிந்து, அதன் மீது தீரா காதல் கொண்டுள்ள பிரதமர் மோடி, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தமிழ் மொழியின் புகழை உலகிற்கு கொண்டுசேர்க்கிறார்.

அந்த வகையில், மலேசியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம் உலகளாவியது எனவும், தமிழ் இலக்கியங்கள் என்றும் அழியா புகழ் கொண்டது எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி குறிப்பிட்டதும் அரங்கமே கரவொலி எழுப்பியது.

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிப்பது போல், இந்திய நிர்வாகத்திலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத்துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் பெயர்களை உதாரணமாக கூறினார். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து வந்து உயர் பதவிகளை அலங்கரிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

மலேசிய வாழ் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதை உணர்ந்தே மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, தற்போது இந்த உறவை மேலும் வலுப்படுத்த திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஒரு முறை மலேசிய பிரதமர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடல் ஒலிக்கப் பட, அதற்கு நடனம் ஆடியும், பாடல் பாடியும் விருந்தினர்களை குஷிப்படுத்தினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பிரதமர் மோடி அதனைத் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். பிரதமர் அன்வர் இப்ராகிம் அருமையான பாடகர் என மோடி பாராட்டு தெரிவிக்க, அவர் உற்சாகத்தின் மிகுதிக்கே சென்றார்.

இறுதியாக, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என தெரிவித்த பிரதமர் மோடி, மிக்க நன்றி என தெரிவித்து உரையை முடித்ததும் அரங்கமே மோடி, மோடி என ஒலித்தது.

Tags: pm modi speechmalaysiatamil cultureThiruvalluvar maiyam malaysiaPM Moditamilnadu
ShareTweetSendShare
Previous Post

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

Next Post

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

Related News

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies