விஜய்யை எந்த மாநிலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து எஸ் ஆர் வி நகரில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யை கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வராக்கலாம் என தெரிவித்தார்.
செங்கோட்டையனை செல்லாத நோட்டு என விமர்சித்த அவர், செங்கோட்டையன் என்ன தூய்மையின் பிறப்பிடமா..? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதவ் அர்ஜுனா தூய்மையின் பிறப்பிடம்; நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அவர் பேச வேண்டியதுதான் என்றும் அவர் விமர்சித்தார்.
ஏழையின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல் வளர்ந்தது ஆதவ் அர்ஜூனா குடும்பம் என்றும் செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.
















