ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், லாகூர் சென்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பாகிஸ்தான், வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரை நடத்த வேண்டும், ஐசிசி வருமான பகிர்வில் பாகிஸ்தானுக்கு அதிக பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
வங்கதேசம் சார்பில், கிரிக்கெட் நலனை முன்னிட்டு இந்தியாவுடன் விளையாட வேண்டும் என பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முடிவில், தனது புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதனால் வரும் 15ஆம் தேதி கொழும்புவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடக்க உள்ளது.
இதற்கு உதவியதால் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய வங்கதேசம் மீது எவ்வித தடையும் விதிக்கப் போவதில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
















