கோவை இருகூர் – போத்தனூர் (10.77 கி.மீ) இரயில்பாதையை இருவழியாக்கும் திட்டத்திற்கு இரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்த முக்கிய திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிய பாரதப் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
















