பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் 7வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்கக் கோரி, சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
அதில், தற்போது வழங்கப்பட்டு வரும் ஆயிரத்து 500 மாதாந்திர உதவித்தொகையை, அண்டை மாநிலங்களைப் பின்பற்றி ஐந்தாயிரமாக உயர்த்த வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அரசாணை 24-ஐ ரத்து செய்துவிட்டு, அரசாணை 20-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















