சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் நிர்வாக அதிகாரியின் உதவியுடன், ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் வட பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நிர்வாக அதிகாரி, ஆளும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து கோயில் பெயரை சொல்லி முறைகேடாக பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கோயிலை சுற்றியுள்ள கடைகளில் அமாவாசை,பௌர்ணமி ஆகிய நாட்களில் 500 ரூபாயும், மற்ற நாட்களில் 200 ரூபாயும் வசூல் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் எருமை கன்றுகளை ஏலம் விட்டு பணம் பெற்றுவருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கோயிலின் நிர்வாக அதிகாரி உதவியுடன் மேச்சேரியை சேர்ந்த அரசியல்வாதிகள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
















