உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு உக்ரைனின் ரயில்வே முனையமாக கருதப்படும் போக்ரோக்ஸ் நகரில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.
டோனட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள போக்ரோக்ஸ் நகரின் வடக்கு பகுதி தற்போது வரை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த பகுதியை கைப்பற்றி விட்டால், டோனட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் தங்கள் வசம் வரும் என்பதால், ரஷ்யா விமானப்படை இடைவிடாது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
















