சட்டமன்ற தேர்தல் பணிகளை வழிநடத்திட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சட்டமன்ற தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட,தனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பாளராக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இணை அமைப்பாளர்களாக S.R.சேகர், R.N.ஜெயப்பிரகாஷ், மா.வெங்கடேசன், மாலா செல்வக்குமார், ராமப்பிரியன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
















