தஞ்சையில் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்த தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கான முழு ஊதியத்தை தருமாறு கோரிக்கை வைத்தனர்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக எனக் கூறி தமிழக அரசு சார்பில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஒப்பந்தாரர் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த உணவு சில நாட்களாகவே தரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டிய தூய்மைப்பணியாளர்கள் இதனை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என வேதனை தெரிவித்தனர். பின்னர் உணவை சாப்பிட மறுத்த தூய்மைப்பணியாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள 761 ரூபாயை ஊதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
















