ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாட்டு இந்து பக்தர்கள் ருத்ராபிஷேக பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த 17 இந்து பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், ருத்ராபிஷேக பூஜை செய்ய 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசன டிக்கெட் பெற்றுள்ள நிலையில், கோயில் குருக்கள் கிறிஸ்தவர்கள் தரிசனம் செய்ய முடியாது எனக்கூறி வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால், வெளிநாட்டு இந்து பக்தர்கள் மன உளைச்சலுடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















