வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில், மேலும் ஒரு ஹிந்து இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மௌல்விபஜார் மாவட்டத்தில் ரத்தன் சுவோ கர் என்ற 28 வயது இந்து இளைஞர், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ரத்தன் சுவோ கர், கமலஞ்ச் உபாசிலாவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.
அவரது உடல் முழுவதும் ரத்தக் கறைகளுடனும், பலத்த காயங்களுடனும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் வேறு எங்காவது கொல்லப்பட்டு, பின்னர் உடல் இங்கு வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
ரத்தன் சுவோ கர்ரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அச்சத்தை அதிகரித்துள்ளது.
















