திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இதனை தொடர்ந்து, ஏழுமலையான் கோயிலில் மனைவி மற்றும் மகனுடன் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.
















